Thursday, March 29, 2012

நதி

நதியை போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்,
கடலை போல விரிந்த இதயம் இருந்திட வேண்டும்,
வானம் போல பிறருக்காக அழுதிட வேண்டும்,
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்.

Wednesday, March 28, 2012

தாயின் துடிப்பு

உனக்காய் துடித்த ஓர் இதயம்
உனக்காய் மட்டுமே துடித்த ஓர் இதயம்
ரத்தத்தை உணவாய் மாற்றிய ஓர் இதயம்
அதை உனக்காய் பரிமாறிய ஓர் இதயம்
நீ கேட்டதெல்லாம் கொடுத்த ஓர் இதயம்
செய்த சேட்டை எல்லாம் பொறுத்த ஓர் இதயம்
இன்று துடிக்கிறது!
இன்றும் கூட துடிக்கிறது முதியோர் இல்லத்தில்!
என் மகன் எப்படி இருக்கிறானோ என நினைத்து?
கவிதன், மதுரை